தங்கச் சாயம் பூசிய ஆகாயத்தினூடே
ஞாயிறு அந்தியில் நடந்து செல்கிறேன் அரசி
வழமைபோலவே தெருவில்
இடையிடையே பூதங்களின் வடிவெடுத்து வந்துசெல்லும்
மோட்டார் வண்டியன்றி வேறேதுமில்லாதவிடத்து
ஆழ்ந்த தனிமையொன்று வந்து
எனக்கு இணையாக நடந்து செல்லும்
ஆவியொன்றோவென நான் எண்ணும்படியாக
சட சடவென்று மழைத்துளிகள் வீழ்கையில்
சுவர்க்கத்திலிருந்து வெளியே வீசப்படுகிறேன்
காற்று நிலத்தில் வீழ்த்தும்
சருகுகளைப் பொறுக்கும் இளைஞனொருவன்
வழிப்பாதையின் ஒரு மூலையில்
அதிர்ச்சியோடு பார்த்தவாறு...
- ஷஸிகா அமாலி முணசிங்க
Original Post - රැජිණ පාරෙහි පුරුදු ලෙස
Translated by M. Rishan Shareef
Picture - Gerald Harvey Jones
No comments:
Post a Comment